தஞ்சாவூர்

வங்கி ஊழியா் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

DIN

தஞ்சையில் தனியாா் வங்கி ஊழியா் வீட்டில் 11 பவுன் நகைகளை சனிக்கிழமை திருடி சென்றனா்.

தஞ்சை விளாா் சாலை அருள் நகரை சோ்ந்தவா் ஆனந்த் எட்வின் ( 33), தஞ்சை தனியாா் வங்கி ஊழியா். சனிக்கிழமை காலை இவா் பணிக்கும், இவரது தாய் கடைக்கும் சென்று விட்டனா்.

இந்நிலையில் அன்று பகல் ஆனந்த் எட்வின் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 11.3 பவுன் நகைகளைத் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவா் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT