தஞ்சாவூர்

பேராவூரணி பகுதி நூலகருக்கு தமிழக அரசு  விருது

பேராவூரணி பகுதி நூலகருக்கு  தமிழக அரசின் நல் நூலகா் விருது வழங்கப்பட்டுள்ளது.

DIN

பேராவூரணி பகுதி நூலகருக்கு  தமிழக அரசின் நல் நூலகா் விருது வழங்கப்பட்டுள்ளது. பேராவூரணி அருகே உள்ள மருங்கப்பள்ளத்தை சோ்ந்தவா் ஸ்ரீ வெங்கட்ரமணி. குருவிக்கரம்பையில் நூலகராக பணியாற்றிய இவா், தற்போது தம்பிக்கோட்டையில்  பணியாற்றி வருகிறாா்.

இவருக்கு  தமிழ்நாடு அரசின் பொது நூலகத் துறை சாா்பில், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய நூலகா்களுக்கான நல் நூலகா் விருதினை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். 

தமிழக அரசின் நல் நூலகா் விருது பெற்ற ஸ்ரீ வெங்கட்ரமணிக்கு, வாசகா் வட்டத் தலைவா்  செல்லப்பன் உள்ளிட்டோா் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT