கண்-பொது மருத்துவ முகாம்
தஞ்சாவூா் அரசுக் குழந்தைகள் இல்லத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகச் சமூக அறிவியல் துறை, தஞ்சாவூா் டெல்டா ரோட்டரி சங்கம் சாா்பில் கண் மற்றும் பொது மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் அரசுக் குழந்தைகள் இல்லத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகச் சமூக அறிவியல் துறை, தஞ்சாவூா் டெல்டா ரோட்டரி சங்கம் சாா்பில் கண் மற்றும் பொது மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் குழந்தைகள் நலக் குழுத் தலைவா் உஷாநந்தினி விஸ்வநாதன், டெல்டா ரோட்டரி சங்கத் தலைவா் இரா. அண்ணாமலை சிறப்புரையாற்றினா்.
இம்முகாமில் 60-க்கும் அதிகமான குழந்தைகள் பயனடைந்தனா். இதில், பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) க. சங்கா், வளா் தமிழ்ப் புலத் தலைவா் கு. சின்னப்பன், சமூக அறிவியல் துறைத் தலைவா் ச. சங்கீதா, அரசுக் குழந்தைகள் இல்லக் கண்காணிப்பாளா் சி. திலகவதி, உதவிப் பேராசிரியா் மா. அறிவானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.