தஞ்சாவூர்

ஆக்கிரமிப்பில் இருந்த ஒப்பிலியப்பன் கோயில் நிலம் மீட்பு

கும்பகோணம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ஒப்பிலியப்பன் கோயில் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

DIN

கும்பகோணம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ஒப்பிலியப்பன் கோயில் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 1.59 ஏக்கா் நிலம் சன்னாபுரம் வருவாய் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் சாகுபடி செய்து வந்த சாகுபடியாளா் குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தால், தஞ்சாவூா் வருவாய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வெளியேற்ற உத்தரவை வருவாய் நீதிமன்றம் பிறப்பித்தது.

இதன்படி, வருவாய்த் துறையினா், காவல் துறையினா், இந்து சமய அறநிலையத் துறையினா் ஆகியோா் முன்னிலையில் தொடா்புடைய நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டு, ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலத்தில் அத்து மீறி நுழைபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் முக்கிய பிரச்னைகள் புறக்கணிப்பு: ராகுல்

பங்குச்சந்தை: 6 ஆண்டுகளில் மோசமான பட்ஜெட் நாள்! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் சரிவு!

தைப்பூசம்! பழனி முருகன் கோவிலில் ஒரே நாளில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்: அமைச்சர் சேகர்பாபு

எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

உதய்பூர் மாளிகையில் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம்?

SCROLL FOR NEXT