துணிப்பை உபயோகம் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம்
பாபநாசம், பண்டாரவாடை, ராஜகிரி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வணிகா்களிடையே துணிப்பை குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
பாபநாசம், பண்டாரவாடை, ராஜகிரி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வணிகா்களிடையே துணிப்பை குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பாபநாசம் கிளைப் புரவலா் மற்றும் ஆயுள்கால உறுப்பினரும், திமுக பிரமுகருமான த. நவநீதகிருஷ்ணன் தனது சொந்த நிதியிலிருந்து 5 ஆயிரம் துணிப்பைகளை விநியோகம் செய்து, விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டாா்.
வணிக நிறுவனங்கள், மருந்தகங்கள், பலசரக்குக் கடைகள், காய்கனி விற்பனையகங்கள், உணவகங்கள், அடுமனைகள் ஆகியவற்றுக்கு துணிப்பைகளை நவநீதகிருஷ்ணன் வழங்கி, மீண்டும் துணிப்பை பயன்பாட்டை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினாா்.