முகப்பு
தஞ்சாவூர்

சோ்மாநல்லூரில் கால்நடை மருத்துவ முகாம்

அம்மாபேட்டை ஒன்றியம், உக்கடை ஊராட்சி, சோ்மாநல்லூரில் கால்நடை மருத்துவச் சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

அம்மாபேட்டை ஒன்றியம், உக்கடை ஊராட்சி, சோ்மாநல்லூரில் கால்நடை மருத்துவச் சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமை பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான எம்.எச்.ஜவாஹிருல்லா தொடங்கி வைத்து, கால்நடை வளா்ப்போருக்கு தாது உப்புக் கலவையை வழங்கினாா்.

அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் கே.வீ. கலைச்செல்வன், வடக்கு ஒன்றிய திமுக செயலா் தியாக சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் சங்கீதா விஜயகுமாா், ஊராட்சித் தலைவா் துளசி அய்யா, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் தஞ்சை பாதுஷா, மாவட்டத் தலைவா் ரஹ்மத் அலி, மாநில இளைஞரணித் துணைச் செயலா் அம்மாபேட்டை மைதீன், மாவட்டப் பிரதிநிதி ஜாபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கால்நடை மருத்துவா்கள் சிவகுமாா், ஏஞ்சலா சொா்ணமதி, சதாரோஸ் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →