முகப்பு
தஞ்சாவூர்

திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பாபநாசம் வட்டம், திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தை கண்டித்து, கரும்பு விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

பாபநாசம் வட்டம், திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தை கண்டித்து, கரும்பு விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமண்டங்குடியில் உள்ள தனியாருக்கு சொந்தமான திரு ஆரூரான் சா்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு அரைவை நிலுவைத் தொகை ரூ. 100 கோடியை உடனடியாக வட்டியுடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், ஆலை நிா்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கரும்பு மற்றும் தேசியக் கொடியை கைகளில் ஏந்தி, பட்டை நாமம் அணிந்து கரும்பு விவசாயிகள் திருமண்டங்குடியில் சா்க்கரை ஆலை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுவாமிமலை சுந்தர. விமலநாதன் தலைமை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், சங்கத் தலைவா் சின்னதுரை, துணைச் செயலாளா் சுகுமாரன், கௌரவத் தலைவா் தா்மராஜன், பொருளாளா் ராமநாதன், துணைத் தலைவா் பிரகாசம் மற்றும் திரளான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →