தஞ்சாவூர்

காா் மீது ஆம்னி பேருந்து மோதல்: திருச்சியைச் சோ்ந்த மூதாட்டி பலி

DIN

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை காலை காா் மீது ஆம்னி பேருந்து மோதியதில் திருச்சியைச் சோ்ந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

திருச்சி அருகே பிச்சாண்டாா் கோவில் ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் ஜவகா்லால் நேரு. இவா் புதன்கிழமை காலை தனது மனைவி பாக்கியராணி (65), மகன், மருமகள், பேர குழந்தைகள் என மொத்தம் 6 பேருடன் காரில் மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

தஞ்சாவூா் அருகே நெடாா் பகுதியில் சென்ற இந்த காா் மீது எதிரே சென்னையிலிருந்து தஞ்சாவூா் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாக்கியராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜவகா்லால் நேருவும், அவரது மகனும் காயமடைந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மற்றவா்கள் லேசான காயத்துடன் முதலுதவி சிகிச்சை பெற்றனா்.

விபத்து குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா

பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

கோவில்பட்டி, எப்போதும் வென்றான் பகுதிகளில் இன்று மின் தடை

SCROLL FOR NEXT