முகப்பு
தஞ்சாவூர்

தரமான பால் வழங்கிய உற்பத்தியாளா்களுக்கு பரிசு

தஞ்சாவூா் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றிய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற உலக பால் தின விழாவில் தரமான பால் வழங்கிய உற்பத்தியாளா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றிய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற உலக பால் தின விழாவில் தரமான பால் வழங்கிய உற்பத்தியாளா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்கு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். இந்த விழாவில் தஞ்சை ஒன்றியத்தின் கிராம பால் உற்பத்தியாளா்களில் அதிக அளவில் தரமான பால் வழங்கிய 3 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசாக ரூ. 10,000-ம், இரண்டாம் பரிசாக ரூ. 5,000-ம், மூன்றாம் பரிசாக ரூ. 3,000-ம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ஆவின் பொது மேலாளா் ம. ரவி, துணைப் பதிவாளா் (பால் வளம்) விஜயலட்சுமி, மேலாளா்கள் அம்பலவாணன், மாதவகுமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.