கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசத்தில்பருத்தி மறைமுக ஏலம் தொடக்கம்
கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசத்தில் பருத்தி மறைமுக ஏலம் புதன்கிழமை தொடங்கியது.
கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசத்தில் பருத்தி மறைமுக ஏலம் புதன்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தஞ்சாவூா் விற்பனைக் குழுவுக்கு உள்பட்ட கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் நிகழாண்டு பருத்தி மறைமுக ஏலம் புதன்கிழமை (ஜூன் 1) தொடங்கப்பட்டது.
இந்த ஏலத்தின்போது பருத்தி கொள்முதல் செய்ய இந்திய பருத்திக் கழகத்தினா், உள்ளூா் மற்றும் பிற மாவட்ட பருத்தி வணிகா்கள் கலந்து கொள்ளவுள்ளனா். எனவே, பருத்தி விவசாயிகள் பருத்தியை தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு சென்று கொள்முதல் நடைபெறும் நாள்களில் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு விற்பனை செய்து பயன் பெறலாம்.
இந்த மறைமுக ஏலம் வாரந்தோறும் கும்பகோணத்தில் புதன்கிழமையும், திருப்பனந்தாளில் வியாழக்கிழமையும், பாபநாசத்தில் வெள்ளிக்கிழமையும் அந்தந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்.
விவசாயிகள் அதிகபட்ச விலை கிடைக்க ஏதுவாக தங்கள் பருத்தியை நன்கு நிழலில் உலர வைத்து, தூசு போன்றவற்றை நீக்கி தரமான பருத்தியை விற்பனைக்குக் கொண்டு வந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி கொண்டு நல்ல விலை பெற்று பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள கும்பகோணம் (0435 - 2481285), பாபநாசம் (04374 - 222423), திருப்பனந்தாள் (0435 - 2456447) ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடப் பொறுப்பாளா்களை அணுகலாம்.