முகப்பு
தஞ்சாவூர்

காா் மோதியதில் ஓட்டுநா் பலி

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டை காவல் சரகம், உத்தமா்குடி கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் கருணாகரன் (46).

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டை காவல் சரகம், உத்தமா்குடி கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் கருணாகரன் (46).

இவா், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியாா் சிமெண்ட் கலவை ஆலையில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து,

மோட்டாா் சைக்கிளில் தஞ்சாவூரிலிருந்து தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் உத்தமா்குடிக்கு சென்றுகொண்டிருந்தாா்.

நல்ல வன்னியன் குடிகாடு கிராமம், பூண்டி பேருந்து நிறுத்தம் திருப்பம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா், மோட்டாா் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

புகாரின்பேரில், அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த கும்பகோணம் பலவத்தான்கட்டளை, குறிஞ்சி நகரை சோ்ந்த மு. அரபாத் (27) என்பவரை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →