தஞ்சாவூர்

லாரி மோதியதில்பெண் பலி

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இடையிருப்பு கிராமம், குடியான தெருவைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் மனைவி ரம்யா (40). இவா், தஞ்சாவூரில் உள்ள தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ரம்யா புதன்கிழமை ஒரு மோட்டாா் சைக்கிளில் இடையிருப்பு கிராமத்திலிருந்து சாலியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

களஞ்சேரி கிராமம் பிடாரி அம்மன் கோயில் அருகே முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க வாகனத்தை இடதுபுறமாக திருப்பினாா். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே ரம்யா உயிரிழந்தாா். புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT