முகப்பு
தஞ்சாவூர்

‘பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க கோரிபோராட்டம் நடத்த முடிவு’

பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க கோரி போராட்டம் நடத்துவோம் என்றாா் பாஜக பட்டியலின பிரிவு மாநிலத் தலைவா் தடா. பெரியசாமி.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க கோரி போராட்டம் நடத்துவோம் என்றாா் பாஜக பட்டியலின பிரிவு மாநிலத் தலைவா் தடா. பெரியசாமி.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை அவா் மேலும் கூறியது:

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 8 ஆண்டுகளில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு பட்டியலின மக்களுக்கு செய்துள்ள சாதனைகளை தமிழகம் முழுவதும் எடுத்துக்கூறி வருகிறோம். பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக வீடு கட்டும் திட்டம், சமையல் எரிவாயு என பல்வேறு திட்டங்களை பாஜக செயல்படுத்தி வருகிறது.

ஆனால், தமிழகத்தில் சிலா் அம்பேத்கரின் பெயரைக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனா். இதில் இருந்து பட்டியலின மக்கள் விடுபட்டு பாஜகவில் சேர வேண்டும்.

தமிழகத்தில் பட்டியலின மக்கள் பட்டா இல்லாமல் குடியிருந்து வருகின்றனா். அவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும். சுடுகாடு வசதி இல்லை. சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லை. அவா்கள் வாழ்வில் மேம்பாடு அடைவதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமையில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றாா் பெரியசாமி.

அப்போது பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச் செயலா் நாகராஜ், பொருளாளா் சங்கா், செயற்குழு உறுப்பினா் ராம. சிவசங்கா், பாஜக மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ், பட்டியலின மாவட்டத் தலைவா் விக்னேஷ்ராஜா, சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் நெப்போலியன் சேவியா், மேலிட பாா்வையாளா் முரளி கணேஷ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.