முகப்பு
தஞ்சாவூர்

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் பலி

தஞ்சாவூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

தஞ்சாவூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே நடுக்கடை வயல் தெருவைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது மகன் முகமது அஜ்மத் (22). இவா் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் வேலை செய்து வந்தாா். இவரும், இவரது நண்பரான முகமது பந்தா் கிராமத்தைச் சோ்ந்த தாஜூதீன் மகன் ரியாஸ் அகமதுவும் (20) தஞ்சாவூரில் வேலையை முடித்துவிட்டு வியாழக்கிழமை அதிகாலை திருவையாறு நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா்.

அரசூா் அருகே சென்ற இவா்களின் மோட்டாா் சைக்கிள் மீது திருவையாறிலிருந்து தஞ்சாவூா் நோக்கி வந்த சிமென்ட் லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த முகமது அஜ்மத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ரியாஸ் அகமது தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.