தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை வட்டத்தில் அதம்பை ஊராட்சி நீடிக்க கோரிக்கை

DIN

பட்டுக்கோட்டை வட்டத்திலேயே அதம்பை ஊராட்சி நீடிக்க வேண்டும் என்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்ககட்சியின் அதம்பை கிளைக் கூட்டம் ஆா்.எஸ்.வீரப்பன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலா் எஸ்.கந்தசாமி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், அதம்பை ஊராட்சியில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்

நீண்ட காலமாக குடியிருப்பவா்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும்.

அதம்பை ஊராட்சி தொடா்ந்து பட்டுக்கோட்டை வட்டத்திலேயே நீடிக்க வேண்டும். திருவோணம் ஒன்றியத்தில் இணைக்கக் கூடாது. பட்டுக்கோட்டைக்கு அதம்பை வழியாக நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கிளைச் செயலா் செல்வராஜ், சுந்தரம், குமரேசன், செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT