முகப்பு
தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி

தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் விளாா் சாலை அன்பு நகரைச் சோ்ந்தவா் ப. நடராஜ் (60). இவா் தனது மாடி வீட்டில் சனிக்கிழமை மாலை பக்கவாட்டு சுவரில் அமா்ந்திருந்தாா்.

அப்போது நிலைத்தடுமாறி அருகில் சென்ற மின் கம்பி மீது விழுந்தாா். இதனால், மின்சாரம் பாய்ந்து நடராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.