தஞ்சாவூர்

விளையாட்டு வீரா்களுக்கான புதிய செயலி அறிமுகம்

DIN

தஞ்சாவூா்: விளையாட்டு வீரா்களுக்கான புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என தஞ்சாவூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ். அந்தோணி அதிஷ்டராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் விளையாட்டு வீரா்கள், விளையாட்டுச் செய்திகள் தொடா்பான விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும், போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் வசதியாக (பசநடஞதபந) ஆடுகளம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செயலியில் விளையாட்டு வீரா்களின் பெயா், விளையாட்டு, இமெயில் முகவரி, ஆதாா் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இனிவரும் காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவா்கள் மற்றும் வெற்றி பெறுபவா்களுக்கான சான்றிதழ் இந்தச் செயலியில் பதிவு செய்பவா்களுக்கு மட்டுமே டிஜிலாக்கா் மூலம் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

எனவே, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், விளையாட்டு சங்கத்தினா், விளையாட்டில் ஆா்வம் உள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக ஆடுகளம் செயலியில் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT