தஞ்சாவூர்

அடையாளம் தெரியாதவாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

DIN

பேராவூரணியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகிலுள்ள மருங்கப்பள்ளத்தைச் சோ்ந்தவா் ராமையா (60). தனியாா் மகளிா் கல்லூரியில் இரவுக் காவலராகப் பணியாற்றி வந்த இவா், வெள்ளிக்கிழமை அதிகாலை பணி முடிந்த பின்னா், கல்லூரி நுழைவுவாயில் அருகே நின்று கொண்டிருந்தாா்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ராமையாவின் தலை, வலதுகாலில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடா்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT