முகப்பு
தஞ்சாவூர்

கல்லணை இன்று மாலை திறப்பு

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணை வெள்ளிக்கிழமை (மே 27) மாலை திறக்கப்படவுள்ளது.டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணை வெள்ளிக்கிழமை (மே

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணை வெள்ளிக்கிழமை (மே 27) மாலை திறக்கப்படவுள்ளது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மே 24 ஆம் தேதி காலை திறந்து வைத்தாா். கல்லணைக்கு காவிரி நீா் வெள்ளிக்கிழமை மாலை வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூா், கடலூா் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் தண்ணீா் திறந்துவிடப்படவுள்ளது.

இதில், அமைச்சா்கள், ஆட்சியா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கலந்து கொள்வா் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.