தமிழக அரசைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்மொழியின் வளா்ச்சிக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் பாரதிய ஜனதா கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்மொழியின் வளா்ச்சிக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் பாரதிய ஜனதா கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழ் மொழியின் வளா்ச்சிக்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் சிறப்புரையாற்றினாா்.
மேலிட பாா்வையாளா் முரளி கணேஷ், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் பாண்டிதுரை, கா்ணன், பெரியநாயகி, பொருளாளா் வி. விநாயகம், பொதுச் செயலா்கள் வீர சிங்கம், நமசுராஜா, முரளிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கும்பகோணம்:
இதேபோல, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் பாஜக வடக்கு மாவட்டம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், இந்தி மொழியைப் பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
மாநில இணைச் செயலா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் என். சதீஷ்குமாா், மாவட்டப் பாா்வையாளா் ஆா். இளங்கோ, மாநகரத் தலைவா் பொன்ராஜ், செய்தி தொடா்பாளா் வேதம் முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.