இந்தி திணிப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி முன் அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி முன் அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பைக் கண்டித்தும், அம்முயற்சியைக் கைவிடக் கோரியும், இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் க. திவான் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் ப. அபினேஷ், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.