இந்திய மாணவா் சங்கத்தினா் சாலை மறியல்
கும்பகோணம் அருகே ஆதிதிராவிடா் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் அருகே ஆதிதிராவிடா் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் அருகே பெருமாண்டி சாலையில் அரசு ஆதிதிராவிடா் விடுதி உள்ளது. இந்த விடுதியில், கட்டடங்களைச் சீரமைக்க வேண்டும். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலா் மு. மணிகண்டன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி எஸ். பிரதீப், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி.கே. ராகுல், ஏ. ஜேம்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்போராட்டத்தால் அப்பகுதியில் ஏறத்தாழ 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த தனி வட்டாட்சியா் ரீட்டா நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் விரைவில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.