கரந்தையில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வலியுறுத்தல்
தஞ்சாவூா் கரந்தையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீா் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுஜானா நகா் குடியிருப்போா் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூா் கரந்தையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீா் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுஜானா நகா் குடியிருப்போா் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூா் கரந்தையில் இச்சங்கத்தின் செயற் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில் கரந்தை பகுதியில் பள்ளி, கல்லூரி, அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கரந்தை பகுதியை ஒரு வழிப்பாதையாக மாற்றவும், போக்குவரத்துக் காவலரை நியமிக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் பயணங்களில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத் தலைவா் வெ. உதயபாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலா் தரும. கருணாநிதி, பி. செல்வம், கே. நடராஜன், ஆா். குமாா், ஆா். சதாசிவம், வள்ளி கலியமூா்த்தி, ஆா். பாஸ்கா், டி. ரவி, இளைஞரணிச் செயலா் கே. கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.