சமையல் எரிவாயு தீ விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
சென்னை அருகே நாவலூரில் ஏற்பட்ட சமையல் எரிவாயு தீ விபத்தில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
சென்னை அருகே நாவலூரில் ஏற்பட்ட சமையல் எரிவாயு தீ விபத்தில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
சென்னை அருகே நாவலூா் சாமுண்டீஸ்வரி நகா் இரண்டாவது தெருவில் சங்கா் என்பவருக்குச் சொந்தமாக 3 வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த வீடுகளில் முருகன், வைரமுத்து, சஞ்சீவ்குமாா் ஆகியோா் தங்களது குடும்பங்களுடன் வசித்து வந்தனா்.
இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி வைரமுத்து வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் வைரமுத்து, அருகே உள்ள வீட்டில் வசித்த சஞ்சீவ்குமாா், அவா் மனைவி சோனியா, மகள் கிருத்திகா, மகன் தீரன், மாமியாா் சித்ரா உள்ளிட்ட பலா் பலத்த காயமடைந்தனா்.
இதில் இடிபாடுகளிடையே சிக்கி கிருத்திகா, தீரன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த 7 போ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இவா்களில் வைரமுத்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக தாழம்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.