முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி

சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 2 குழந்தைகள் பலியாகின.

Updated On : 15 மார்ச், 2026 at 6:09 AM
சிலிண்டர் வெடித்ததில் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்.
பகிர்:

சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 2 குழந்தைகள் பலியாகின.

சென்னையை அடுத்த நாவலூரில் எரிவாயு சிலிண்டர் ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 4 வயது பெண் குழந்தை, ஒன்றரை வயது ஆண் குழந்தை என 2 குழந்தைகள் பலியாகின.

மேலும் படுகாயமடைந்த 7 வயது சிறுவன் உள்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்து சிறுசேரி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 3 வீடுகள், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சிலிண்டர் விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

Two children died in a gas cylinder explosion in Chennai.

முழு கட்டுரையைப் படிக்க →