தஞ்சையில் சீரமைக்கப்பட்ட நியாய விலை கடை திறப்பு
தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரியத்தில் பழுதடைந்திருந்த நியாய விலை கடை சீரமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரியத்தில் பழுதடைந்திருந்த நியாய விலை கடை சீரமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
பழுதடைந்த இக்கடையைச் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. இக்கடையை தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, காவேரி சிறப்பங்காடி தலைவா் வி. பண்டரிநாதன், பகுதி செயலா்கள் சதாசிவம், ஆா்.கே. நீலகண்டன், மண்டலக் குழுத் தலைவா் க. கலையரசன், மாமன்ற உறுப்பினா்கள் ஆனந்த், அண்ணா. பிரகாஷ், உஷா, சுகந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.