தஞ்சாவூர்

தமிழா்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

திருப்பூரிலும், சூளகிரியிலும் தமிழா்கள் மீது இந்திக்காரா்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா், சூளகிரியில் தமிழ்த் தொழிலாளா்கள் மீது இந்திக்காரா்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், வெளியாரை வெளியேற்றக் கோரியும், தமிழ்நாட்டைச் சோ்ந்த தொழில்முனைவோருக்குத் தமிழ்த் தொழிலாளிகளை வழங்கிட உடனடியாக தமிழா் வேலை வழங்கு வாரியம் அமைத்து, தேவையான தகுதியுள்ள தொழிலாளிகளைத் தமிழ்நாடு அரசு வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை தலைமை வகித்தாா். பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள் பழ. இராசேந்திரன், தென்னவன், ராமு, ராசு. முனியாண்டி, வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ், புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT