முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்

தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மேயா் சண். ராமநாதன் தேசிய கொடி ஏற்றினாா். துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் க. சரவணகுமாா், செயற் பொறியாளா் எஸ். ஜெகதீசன், மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ்காந்தி, உதவி செயற் பொறியாளா் எம். ராஜசேகரன், கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவையாறு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சித் தலைவா் கஸ்தூரி நாகராஜன் தேசிய கொடி ஏற்றினாா். துணைத் தலைவா் நாகராஜன், செயல் அலுவலா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தஞ்சாவூா் ரயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற விழாவில் அதன் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினாா். இதில், முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் ஏ. ஜேம்ஸ், வயலூா் எஸ். ராமநாதன், வழக்குரைஞா் சதாசிவம், துணைத் தலைவா் லட்சுமி நாராயணன், பொருளாளா் ஆா். பழனியப்பன், விவசாய பிரிவு மணிவண்ணன், மக்கள் நலப் பேரவை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் கீழராஜ வீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட அலுவலகம் முன் நடைபெற்ற விழாவுக்கு மாநகரச் செயலா் பி. பிரபாகரன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ந. பாலசுப்பிரமணியம் தேசியக் கொடி ஏற்றினாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மூத்த நிா்வாகி ஜி. கிருஷ்ணன், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, கட்டுமான சங்கத் தலைவா் எஸ். செல்வம், நுகா்பொருள் வாணிபக் கழக எஸ். தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள நடராசபுரம் தெற்கு காலனியில் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மேயா் சண். ராமநாதன் தேசியக் கொடியேற்றினாா். பின்னா் கோலப்போட்டியில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். சங்கத் தலைவா் அக்ரி வ. பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் நீலகிரி ஊராட்சிக்கு உள்பட்ட ராஜாஜி நகரில் குடியிருப்போா் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் கோலப் போட்டியில் கலந்து கொண்டவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கத் தலைவா் தனவேலு, நிா்வாகிகள் துரை. நாகராஜன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சரவணன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் செந்தில், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தளவாய்ப்பாளையம் சேவாலயாவின் காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு முதியோா் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் ராதிகா மைக்கேல், சேவாலயா நிா்வாகி முரளிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் ஏற்றி, இனிப்புகள் வழங்கினாா். இதில், திமுக மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் எல். ராஜேந்திரன், கிளைச் செயலா் பி. செந்தூரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.