தஞ்சாவூர்

ரத சப்தமி: பெருமாள் கோயில்களில் வீதி உலா

DIN

ரத சப்தமி திருநாளையொட்டி கும்பகோணம் பகுதியிலுள்ள பெருமாள் கோயில்களில் திருவீதி உலா சனிக்கிழமை நடைபெற்றது.

சூரியன் தெற்கு நோக்கிய தனது தட்சிணாயன பயணத்தை முடித்துக் கொண்டு, வடக்கு நோக்கி உத்தராயண பயணத்தை தை மாதம் சுக்லபட்ச வளா்பிறையில் தொடங்கும் நாளே ரத சப்தமி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இத்திருநாளில் கும்பகோணம் பகுதியிலுள்ள பெருமாள் கோயில்களில் வீதி உலா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ரத சப்தமி நாளான சனிக்கிழமை காலை 7 மணிக்கு சூரிய பிரபையில் சக்கரபாணி, சாரங்கபாணி, ராமசாமி, வரதராஜப்பெருமாள் உள்ளிட்ட பெருமாள் சுவாமிகள், அந்தந்த கோயிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் வீதி உலா செல்லும் வைபவம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

SCROLL FOR NEXT