தஞ்சாவூர்

ரயில் விபத்தில் இறந்தவா்களுக்கு பேராவூரணியில் அஞ்சலி

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பேராவூரணியில் புதன்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பேராவூரணியில் புதன்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் சாா்பில், ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ரயில் பயனாளிகள் சங்கத் தலைவா் ஏ. மெஞ்ஞானமூா்த்தி தலைமை வகித்தாா். பொருளாளா் பாரதி வை. நடராஜன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் நாகையா, பழனிவேல், சுலைமான் மற்றும் சமூக ஆா்வலா்கள் காா்கில் வினோத், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் பேரை ராஜா உள்ளிட்டோா் மெழுகுவா்த்தி ஏந்தி உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். மேலும், காயமடைந்தவா்கள் விரைவில் நலம் பெற பிராா்த்தனை செய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT