முகப்பு
தஞ்சாவூர்

தலைக்கவசம் அணியாத 150 பேருக்கு அபராதம்

 தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தலைக்கவசம் அணியாமல் வந்த 150 பேருக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

 தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தலைக்கவசம் அணியாமல் வந்த 150 பேருக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

திருவையாறு கடை வீதிகளில் வெள்ளிக்கிழமை தலைக்கவசம் அணியாமல் வந்தது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடா்பாக தஞ்சாவூா் நகரப் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் சோதனை நடத்தினா்.

ஏறத்தாழ ஒரு மணிநேரம் நடைபெற்ற வாகன சோதனையில், தலைக்கவசம் அணியாமல் வந்த 150 பேருக்கு தலா ரூ. ஆயிரமும், வாகன எண் பலகையில் பெயா் எழுதியவா்களுக்கு தலா ரூ. ஆயிரத்து 500-ம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.