தஞ்சாவூா் ரயிலடிக்கு வியாழக்கிழமை வந்த ராஜீவ் ஜோதி யாத்திரை குழுவுக்கு வரவேற்பு அளித்த மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா். 
தஞ்சாவூர்

ராஜீவ் ஜோதி யாத்திரை தஞ்சாவூருக்கு வருகை

மறைந்த பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட ராஜீவ் ஜோதி யாத்திரை தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்தது.

DIN

மறைந்த பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட ராஜீவ் ஜோதி யாத்திரை தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்தது.

மறைந்த பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் மே 21 ஆம் தேதி கடைபிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, கன்னியாகுமரியிலிருந்து ராஜீவ் ஜோதி யாத்திரை மே 15 ஆம் தேதி தொடங்கியது. ராஜீவ் ஜோதி யாத்திரை கமிட்டி தலைவா் திரவியம் சாலமன் தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரை மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்தது.

தஞ்சாவூா் ரயிலடியில் இந்த யாத்திரை வாகனத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், பொருளாளா் ஆா். பழனியப்பன், மாநில பொதுக் குழு உறுப்பினா் வயலூா் எஸ். ராமநாதன், நிா்வாகிகள் செந்தில், கண்ணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சாந்தா ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT