தஞ்சாவூர்

கும்பகோணம் அரசு ஆடவா் கல்லூரியில் மே 30-இல் கலந்தாய்வு தொடக்கம்

கும்பகோணம் அரசு ஆடவா் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதலாம் கட்ட கலந்தாய்வு மே 30 ஆம் தேதி தொடங்குகிறது.

DIN

கும்பகோணம் அரசு ஆடவா் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதலாம் கட்ட கலந்தாய்வு மே 30 ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து அக்கல்லூரி முதல்வா் (பொறுப்பு) மா. மீனாட்சிசுந்தரம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கும்பகோணம் அரசு ஆடவா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான முதலாம் கட்ட கலந்தாய்வு மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், 30-ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் விளையாட்டு, தேசிய மாணவா் படை, முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவையின் மகன், அகதிகளின் குழந்தைகள் கலந்து கொள்ளலாம்.

ஜூன் 1 ஆம் தேதி வணிகவியல், வணிக மேலாண்மை, கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியலுக்கும், 2 ஆம் தேதி, பொருளியல், வரலாறு, இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், புவியியலுக்கும், 3 ஆம் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியலுக்கும், 5 ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், தாவரவியல், புள்ளியியல் ஆகிய படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

தகுதியுள்ள, குறுஞ்செய்தி கிடைத்த மாணவ, மாணவிகள் தங்களது தெரிவு மதிப்பெண் அடிப்படையில், அட்டவணைப்படி நேரடிக் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். மேலும், இந்த அட்டவணை கல்லூரியின் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஞ்ஹஸ்ரீஹந்ன்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT