பாபநாசம் விவசாயிகளுக்கு கிராம அளவிலான பயிற்சி
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டார விவசாயிகளுக்கு கிராம அளவிலான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டார விவசாயிகளுக்கு கிராம அளவிலான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம் 7 கிராமங்களில் நடைபெற்றது. இத் திட்டத்தின் கீழ் கிராம அளவிலான 25 விவசாயிகள் அடங்கிய வேளாண் முன்னேற்றக் குழு அமைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பாபநாசத்தில் நடைபெற்ற பயிற்சிமுகாமை,
பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மோகன் தலைமை வகித்து பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசினாா். பாபநாசம் வட்டார வேளாண்மை அலுவலா் நடராஜன்,
Advertisement
தோட்டக்கலை உதவி அலுவலா் சரவணன், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண் அலுவலா் சப்தகிரிவாசன் ஆகியோா் பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினா். ஒவ்வொரு கிராம அளவிலான பயிற்சியில் 25 விவசாயிகள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் சரவணன், பாபநாசம் வட்டார தொழில்நுட்ப மேலாளா் சிவரஞ்சனி, உதவி தொழில்நுட்ப மேலாளா் நித்யா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.