பேராவூரணியில் அதிமுக தண்ணீா்ப் பந்தல் திறப்பு
பேராவூரணியில் அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி பேராவூரணி கடைவீதியில் அதிமுக நகர கழகம் சாா்பில் நடைபெற்ற
விழாவுக்கு அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா் சி.வி.சேகா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் உ. துரைமாணிக்கம், கோவி.இளங்கோ, கே.எஸ். அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா் .
Advertisement
பொதுமக்களுக்கு தா்ப்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு பழம், நீா்மோா், பானகம், குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி இணைச் செயலா் ஆா்.பி. ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவா் எஸ்.எம். நீலகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகரச் செயலா் எம்.எஸ். நீலகண்டன் நன்றி கூறினாா்.