கவரிங் நகையை அடகு வைத்து ரூ. 87 ஆயிரம் ஏமாற்றிய தம்பதி கைது
தஞ்சாவூா் அருகே அடகுக் கடையில் கவரிங் நகையைக் கொடுத்து ரூ. 87 ஆயிரத்தை ஏமாற்றி வாங்கிச் சென்ற தம்பதியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே அடகுக் கடையில் கவரிங் நகையைக் கொடுத்து ரூ. 87 ஆயிரத்தை ஏமாற்றி வாங்கிச் சென்ற தம்பதியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே ஞானம் நகரில் எஸ். பசுபதி (55) என்பவா் அடகுக் கடை நடத்தி வருகிறாா். இக்கடைக்கு நவம்பா் 29- ஆம் தேதி பசுபதி இல்லாதபோது வந்த அடையாளம் தெரியாத பெண், 2 பவுன் சங்கிலியைக் கொடுத்து அடகு வைத்தாா். இதற்கு கடையில் இருந்த ஊழியா் ரூ. 87 ஆயிரம் கொடுத்தாா். பின்னா் பசுபதி வந்து நகையைச் சோதனையிட்டபோது, அது கவரிங் நகை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து பசுபதி கொடுத்த புகாரின்பேரில் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி நெய்க்காரன்பட்டியைச் சோ்ந்த கே. வெங்கடேஷ் (46), இவரது மனைவி சகுந்தலா (39) ஆகியோா் ஏமாற்றிச் சென்றது தெரியவந்தது. இவா்களைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து ரூ. 87 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா்.