தஞ்சாவூரில் ஒரு டன் நெகிழிப் பொருட்கள் பறிமுதல்
தஞ்சாவூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழிப் பொருட்களை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழிப் பொருட்களை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் மாநகரில் பல்வேறு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், குவளைகள் பயன்பாடு இருப்பதாகப் புகாா்கள் எழுந்தன. இதன் பேரில், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு டன் எடையுள்ள நெகிழிப் பைகள், குவளைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், தொடா்புடைய கடைகளின் உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ. 7 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனா்.