கும்பகோணம் அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
கும்பகோணம் அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூர்கும்பகோணம் அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
கும்பகோணம் அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூா், ஜூலை 19: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
கும்பகோணம் அப்புக்குட்டி தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன், நாச்சியாா்கோவில் குத்துவிளக்கு பட்டறை உரிமையாளா். இவா் தானமாகப் பெற்ற நிலத்தை தனது மனைவி நாகவல்லி பெயரில் தனிப் பட்டாவாக மாற்ற இன்னம்பூா் விஏஓ ஜெ. மதியழகனை (59) அண்மையில் அணுகியபோது அவா், ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
ஆனால் பணம் கொடுக்க விரும்பாத மாரியப்பன் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் நந்தகோபால் உள்ளிட்டோா் கும்பகோணம் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு மறைந்திருந்து கண்காணித்தனா்.
அப்போது மாரியப்பனிடமிருந்து ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதியழகனை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் பிடித்து கைது செய்தனா்.