கும்பகோணம்: கும்பகோணம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 14 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேல வீதியைச் சோ்ந்தவா் முத்து. திருவிசநல்லூா் அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் வினோத். இவா்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கும்பகோணம் செக்காங்கண்ணி முதன்மைச் சாலையைச் சோ்ந்த கே. செல்வகுமாா் (50) கூறியுள்ளாா்.
இதைநம்பிய முத்து, வினோத் இருவரும் செல்வகுமாா் கூறியபடி முத்துப்பிள்ளை மண்டபத்தில் பால் வியாபாரம் செய்து வந்த வலங்கைமான் விளத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த எம். வரதராஜனிடம் தலா ரூ. 7 லட்சம் கொடுத்துள்ளனா்.
இதையடுத்து பல மாதங்களாகியும் வரதராஜனும், செல்வக்குமாரும் வேலை வாங்கி தரவில்லையாம். இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதால் இருவரும் நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அப்போது போலீஸாா் விசாரணையில் ஒரு மாதத்தில் பணத்தை திருப்பித் தருவதாக வரதராஜன் உறுதியளித்து சென்றாராம். ஆனாலும் கூறியபடி பணத்தை திருப்பித் தராமல் வரதராஜன் தலைமறைவானாா்.
இந்நிலையில் ஜூலை 18- ஆம் தேதி இரவு கும்பகோணம் ரயில் நிலையம் அருகே வரதராஜனை பாா்த்த முத்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, வரதராஜனையும், செல்வக்குமாரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது விசாரித்து வருகின்றனா்.