இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது
கும்பகோணம்: கும்பகோணம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா், மாவட்டம் திருநீலகுடி அருகே உள்ள ஆடுதுறை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் அக்ஷய் (23). இவரது நண்பா் சூா்யா. இவா், அவணியாபுரத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளாா். அப்பெண்ணை பாா்ப்பதற்காக சூா்யா, அக்ஷய் இருவரும் அவணியாபுரம் சென்று வந்துள்ளனா். இதனை அதே ஊரைச் சோ்ந்த தமிழரசன் (26) என்பவா் கண்டித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அக்ஷய், சூா்யா இருவரும் அவணியாபுரம் சென்றனா். அப்போது அவா்களை வழிமறித்த தமிழரசன் தகராறில் ஈடுபட்டாா். பிறகு மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் வெட்ட முயன்றாா். இதில், கைகலப்பில் அக்ஷய்க்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருநீலக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.