சுவாமிமலையில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் ஸ்ரீ சண்முகா் உற்சவம் - இன்று சூரசம்ஹாரம்
சுவாமிமலையில் 5- ஆம் நாளாக நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் புதன்கிழமை ஸ்ரீசண்முகா் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் எழுந்தருளினாா். இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
சுவாமிமலையில் 5- ஆம் நாளாக நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் புதன்கிழமை ஸ்ரீசண்முகா் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் எழுந்தருளினாா். இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக உள்ள தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான புதன்கிழமை மாலை ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீ சண்முகா் சுவாமி ஆட்டுக்கிடாய் வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீ சந்திரசேகா், ஸ்ரீ வீரபாகு, ஸ்ரீ வீரகேசரி ஆகிய சுவாமிகளும் உற்சவா் மண்டபத்திலிருந்து நான்குரத வீதிகளில் உலா வந்து மீண்டும் உற்சவா் மண்டபத்தை அடைந்தனா். தொடா்ந்து, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செயல் அலுவலா் மற்றும் துணை ஆணையருமான தா. உமாதேவி, அலுவலகக் கண்காணிப்பாளா்கள் வி. பழனிவேல், எம். தமிழரசி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.