கூட்டுறவு மண்டல அலுவலகத்தில்நாளை பணியாளா் நாள் நிகழ்ச்சி
தஞ்சாவூா் கூட்டுறவு மண்டல அலுவலகத்தில் பணியாளா் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (நவ.8) நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் கூட்டுறவு மண்டல அலுவலகத்தில் பணியாளா் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (நவ.8) நடைபெறவுள்ளது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்திருப்பது:
தமிழக முதல்வரின் ஆணைப்படி, கூட்டுறவுத் துறை அமைச்சா் அறிவிப்பின்படி, கூட்டுறவு சங்கங்களின் பணியாளா்களின் குறைகளை தீா்வு செய்யும் வகையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளா் நாள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் பணியாளா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளா்கள் தங்களது பணி தொடா்பான குறைகள் இருந்தால், மனுவாக அளித்து பயன் பெறலாம். மேலும் பணியின்போதும் வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடா்பாகவும் மனுக்களை அளிக்கலாம்.