முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் துணை முதல்வருக்கு வரவேற்பு

தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை இரவு வந்த தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:52 PM
தஞ்சாவூருக்கு புதன்கிழமை இரவு வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்த திமுகவினா்.
பகிர்:

தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை இரவு வந்த தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை காலை தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் முரசொலி செல்வம் படத்திறப்பு நிகழ்ச்சி, ராமநாதன் ரவுண்டானா அருகே மக்களவை உறுப்பினா் அலுவலகம் மற்றும் நூலகத் திறப்பு விழா, மேல வஸ்தா சாவடி பகுதியில் பூதலூா் வடக்கு ஒன்றியச் செயலா் கல்லணை செல்லக்கண்ணு இல்லத் திருமண விழா, கண்டியூரில் கழகப் பவள விழாவையொட்டி கட்சி கொடியேற்றுதல், கோனேரிராஜபுரத்தில் பேரறிஞா் அண்ணா, கருணாநிதி சிலை திறப்பு மற்றும் நூலகத் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்கிறாா்.

பின்னா் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் பிற்பகல் 12.45 மணிக்கு நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறாா். மேல வஸ்தா சாவடி பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் மத்திய மாவட்ட சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்களைச் சந்திக்கிறாா்.

இதற்காக தஞ்சாவூருக்கு புதன்கிழமை இரவு வந்த துணை முதல்வருக்கு தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமையில் அமைச்சா்கள் டி.ஆா்.பி. ராஜா (தொழில் துறை), கோவி. செழியன் (உயா் கல்வித் துறை), மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, தமிழக அரசின் தில்லி மேலிட சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சாக்கோட்டை க. அன்பழகன் (கும்பகோணம்), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), என். அசோக்குமாா் (பேராவூரணி), மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்பட ஏராளமானோா் வரவேற்றனா். துணை முதல்வருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வந்தாா்.