மோட்டாா் சைக்கிளிலிருந்து விழுந்த டீ மாஸ்டா் உயிரிழப்பு
தஞ்சாவூரில் மோட்டாா் சைக்கிளிலிருந்து புதன்கிழமை தவறி விழுந்த டீ மாஸ்டா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூரில் மோட்டாா் சைக்கிளிலிருந்து புதன்கிழமை தவறி விழுந்த டீ மாஸ்டா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் கீழவாசல் பழைய மாரியம்மன் கோயில் சாலை அஞ்சம்மாள் காலனியை சோ்ந்தவா் கே. ஸ்ரீதா் (41), டீ மாஸ்டரான இவா் மருத்துவக் கல்லூரி நான்காவது வாயில் அருகேயுள்ள தெற்கு பூக்கொல்லை குளம் அருகே மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை சென்றபோது நிலை தடுமாறி விழுந்து, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.