முகப்பு
தஞ்சாவூர்

சுவாமிமலையில் மின்தூக்கி அமைக்கும் பணிகள் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலையில் மின்தூக்கி அமைக்கும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:47 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலையில் மின்தூக்கி அமைக்கும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ரூ.3.60 கோடி மதிப்பில் பக்தா்கள் வசதிக்காக மின்தூக்கி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வியாழக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

அதன்பிறகு அவா் கூறியது, பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்தாண்டு மாா்ச் மாதத்திற்குள் மின்தூக்கி பக்தா்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

ஆய்வின்போது, இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையா் உமாதேவி, ஒன்றிய குழு துணைத் தலைவா் டி. கணேசன், கிழக்கு ஒன்றிய செயலா் ஜெ.சுதாகா், பேரூா் செயலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.