முகப்பு
தஞ்சாவூர்

நிதி நிறுவனம் நடத்தி ரூ.86 லட்சம் மோசடி: உரிமையாளா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.86 லட்சம் மோசடி செய்தவரை மேற்கு காவல்நிலையப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 9:27 PM
சந்திரசேகா்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.86 லட்சம் மோசடி செய்தவரை மேற்கு காவல்நிலையப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரைச் சோ்ந்தவரும், முன்னாள் ராணுவ வீரருமான முரளி, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜான்செல்வராஜ் நகரைச் சோ்ந்த சந்திரசேகா்(42) என்பவா் நடத்தி வந்த சூா்யா நிதி நிறுவனத்தில் சோ்ந்து பணம் கட்டி ஏலச்சீட்டு ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் எடுத்துள்ளாா். ஆனால் நிதி நிறுவனத்தினா் சீட்டுப் பணத்தை உரிய காலத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

இதனால், சந்தேகமடைந்த முரளி கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையறிந்த சந்திரசேகா் தலைமறைவானாா். இதுகுறித்துத் தகவலறிந்த மேலும் 26 போ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா்

ரமேஷ் வழக்குப் பதிந்து நிதி நிறுவன உரிமையாளா் சந்திரசேகரை (42) கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.