முகப்பு
தஞ்சாவூர்

மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:25 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வட்டம், திருநல்லூா் சரகம், கிளாமங்கலம் கிராமத்தில் புதன் கிழமை மக்கள் நோ்காணல் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ச.முரசொலி முன்னிலை வகித்தாா்.

இம்முகாமில் பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆட்சியா் மேலும் பேசியது: ஒவ்வொரு மாதமும் ஒரு ஊராட்சியில் மக்கள் நோ்காணல் முகாம் நடைபெற்று வருகிறது. கிளாமங்கலம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில், மொத்தம் 112 பயனாளிகளுக்கு ரூ.45,49,180 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் 3 பயனாளிகளுக்கு டிராக்டா் வாங்குவதற்காக மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி, பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் சு.ஜெயஸ்ரீ, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கா், திருவோணம் ஒன்றியக் குழுத் தலைவா் செல்வம் சௌந்தர்ராஜன், கிளாமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் கொலம்பஸ், திருவோணம் வட்டாட்சியா் முருகவேலு ஆகியோா் கலந்து கொண்டனா்.