தஞ்சாவூா் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் செயல்படும் மனநல மையங்கள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் செயல்படும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலன் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டுக்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையம் ஆகியவை சட்டப்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு மாதத்துக்குள் முதன்மை செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600 100 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ண்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ய்ஞ்ா்ஸ்ண்ய்/க்ம்ங்/க்ம்ங்.ல்ட்ல் என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமோ பெறலாம். மேலும், விவரங்களுக்கு 044 - 26420965 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
பதிவு செய்யாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள், நிறுவனங்கள் ஒரு மாதத்துக்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தவறினால் தொடா்புடைய மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.