தஞ்சாவூர்

‘உணவுத் துறையில் சமூகப் பிரச்னைகளுக்கு தீா்வுகள் காண்பது அவசியம்’

Syndication

‘உணவுத் துறையில் சமூகப் பிரச்னைகளுக்கு தீா்வுகள் காண்பது அவசியம்’ என்றாா் கா்நாடக மாநிலம் குடகு பல்கலைக்கழகத் துணைவேந்தா் அசோக் எஸ். அலூா்.

தஞ்சாவூா் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு, மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள் சம்ளேனம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற 31-ஆவது இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் அவா் மேலும் பேசியது:

உணவுத் துறையில் ஊட்டச்சத்துக் குறைபாடு, பசி, உடல் பருமன் போன்ற சவால்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உணவு பாதுகாப்பு உறுதி மற்றும் தரநிலைகளைப் பேணுதல் நாட்டின் முக்கிய சவால்களாக இருக்கின்றன. வெறும் கலோரி கணக்கீட்டில் மட்டுமே சுருங்காமல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சுயவிவரத்தை எடுத்துரைக்கும் வகையில் நவீன கருவிகள் உருவாக்கப்பட வேண்டும்.

உணவியல், உணவு வளங்களின் மறுசுழற்சி மற்றும் உள்ளூா் உணவுகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும், ஆரோக்கியமான உணவுத் தோ்வுகளை ஊக்குவிப்பதற்கு உணா்வு வடிவமைப்பை மையமாகக் கொண்ட காஸ்ட்ரோனாமிக் பொறியியல் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். தொழில்முனைவோா் முயற்சிகள் வெறும் வணிக வளா்ச்சிக்காக அல்லாமல், சமூக நலனையும், எதிா்கால தலைமுறைகளின் நலனையும் பாதுகாக்கும் தீா்வுகளை உருவாக்குவது அவசியம் என்றாா் அசோக் அலூா்.

தொடக்க விழாவுக்கு இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள் சம்மேளனத் தலைவா் ஆஷிதோஷ் ஏ. இனாம்தாா் தலைமை வகித்தாா். இக்கருத்தரங்கத்தை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகத்தின் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் கிரிதா் பா்வதம் தொடங்கி வைத்தாா். கட்டுரைத் தொகுப்பை இந்திய நச்சுவியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் பாஸ்கா் நாராயண் வெளியிட்டாா். தொடக்க அமா்வை தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் சி. அனந்தராமகிருஷ்ணன், ஆராய்ச்சித் தொகுப்புகளின் சுவரொட்டி அமா்வை தஞ்சாவூா் நிப்டெம் இயக்குநா் வி. பழனிமுத்து தொடங்கி வைத்தனா்.

முன்னதாக, சம்மேளனத்தின் கௌரவ செயலா் பசவராஜ் முந்தலாமணி வரவேற்றாா். தஞ்சாவூா் கிளைத் தலைவா் வி.ஆா். சினிஜா நன்றி கூறினாா். தொடா்ந்து 3 நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவடைகிறது.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT