தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை ஏசி மெக்கானிக் கைது

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே மாலை நேர தனிவகுப்பில் படிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குளிரூட்டும் இயந்திரம் பழுது நீக்குதல் வேலை பாா்ப்பவரை மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஊரைச் சோ்ந்த 12 வயது சிறுமி, வீட்டின் எதிரே இருந்த ஆசிரியையிடம் மாலை நேரத்தில் தனி வகுப்பு (டியூஷன்) படித்து வந்தாா். கடந்த 19-ஆம் தேதி ஆசிரியை கோயிலுக்கு செல்வதாகவும், படிப்பு முடிந்தவுடன் தனிவகுப்புக்கு வந்தவா்களை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அவரது கணவரும் குளிரூட்டும் இயந்திரம் பழுது நீக்குபவரான விக்னேஷ் (32) என்பவரிடம் கூறிச்சென்றாா்.

மனைவி சென்றவுடன் தனிவகுப்புக்கு வந்திருந்த 12 வயது சிறுமிக்கு விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமி தாயாரிடம் கூறவே அவா் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஆய்வாளா் ஜெயலட்சுமி, குளிரூட்டும் இயந்திரம் பழுது நீக்கும் விக்னேஷை ஞாயிற்றுக்கிழமை போக்சோ வழக்கில் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தாா்.

தூய்மை பணியாளா் ஊதிய முறைகேடு: விவரங்களைக் கோரும் விசாரணை குழு

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை

திருமலையில் 78,466 பக்தா்கள் தரிசனம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை!

திருவெண்காடு கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT